மத்திய அரசுப்பணிகளில் பட்டயக் கணக்காளர், ஆய் வாளர், புள்ளியியல் அதி காரி, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர், வருமானவரித் துறை ஆய் வாளர் உட்பட 21 பணிகளில் காலியாக உள்ள 11,271 பணி யிடங்களை நிரப்புவதற் கான முதல்கட்ட தேர்வு கடந்த ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரையும், 2-ம்கட்ட தேர்வு செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரையும் நடை பெற்றது.
இவற்றில் தேர் வானவர்களுக்கான இறுதி கட்ட தேர்வு நேற்று நடை பெற்றது.இந்த தேர்வை நாடு முழு வதும் டெல்லி, சென்னை, மும்பை உட்பட நகரங்களில் ஆயிரக்கணக்கான பட்ட தாரிகள் எழுதினர். தமிழகத் தில் மட்டும் 4,400 பேர் தேர்வு எழுதினர்.
கட்டுரை வடிவிலான தேர்வுகள் எளிதாக இருந்த தாக தேர்வர்கள் தெரிவித் தனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியல் ssc.nic.in இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Post a Comment