Title of the document

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதப்படையின் ஒரு அங்கமான இந்திய கடலோர காவல்படையில் 'குரூப்-ஏ' பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் 'அசிஸ்டன்ட் கமாண்டன்ட் 1-2020' என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜெனரல் டியூட்டி
பணி: டெக்னிக்கல் என்ஜினீயரிங்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-1995 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

பணி: கமர்சியல் பைலட் லைசென்ஸ்
வயதுவரம்பு: 1.7.1995 மற்றும் 30.6.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 01.07.1995 மற்றும் 30.06.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1995 மற்றும் 30.06.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2019

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post