Title of the document

வணக்கம் போடாதீங்க!அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

*ஓட்டுச்சாவடிகளுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, சிறப்பு கவனிப்பு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது*

*ஓட்டுச்சாவடிகளில், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் பி - 1, பி - 2, பி - 3 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது*

*ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் முகவர்கள், மொபைல் போனில் பேசுதல், புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்*

*ஓட்டு போட வரும், வி.ஐ.பி.,க்களுக்கு அலுவலர்கள் எழுந்து நின்று, வணக்கம் செலுத்தவோ, தனி கவனம் செலுத்தவோ கூடாது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முகவர்கள் முன்னிலையில் சரிசெய்ய வேண்டும்*

*மதியம், 3:00 மணிக்கு மேல், அரசியல் கட்சி முகவர்களை வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்க கூடாது; முகவர்கள், அரசியல் விஷயங்களை பேசக்கூடாது*

*பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். பாதுகாப்பு இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது*

*வாக்காளர்கள், இடது கை ஆள்காட்டி விரலில் நகத்துக்கும், தோலுக்கும் மத்தியில், அழியாத மை வைக்க வேண்டும்*

*இடது கையில் விரல்கள் இல்லாத பட்சத்தில், வலது ஆள்காட்டி விரலில், மை வைக்கலாம். அந்த விரலும் இல்லையென்றால், அதற்கடுத்த விரலில் வைக்கலாம்*

*இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாதவர்களுக்கு, இடது மணிக்கட்டில் மை வைக்கலாம். இரண்டு கைகளுமே இல்லாதவருக்கு, இடது கால் விரலில் மை வைக்கலாம்*

*ஓட்டுச்சாவடி மையம் வந்தும் ஓட்டுப் போட முடியாதவருக்கு, தலைமை அலுவலர், ஓட்டு போட உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post