கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
*தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2019-2020- ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ளார்*
*அதில் கூறியிருப்பதாவது*
*தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும்*
*அரசு உதவி பெறும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், தரவரிசைப் பட்டியலை அந்தப் பாடப் பிரிவுக்கு ஏற்ப 400 மதிப்பெண்களுக்குத் தயார் செய்ய வேண்டும்*
*கடந்த 2018-2019-ஆம் கல்வி ஆண்டுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு 800 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு, அது 400 மதிப்பெண்களாக மாற்றம் செய்து தர வரிசைப் பட்டியல் தயார் செய்ய வேண்டும்*
*மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல் பாடப் பிரிவுகளில் சேர கட்டாயம் கணிதப் பாடம் படித்திருக்க வேண்டும். வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியியல் பாடப்பிரிவுகளில் சேர வேதியியல் பாடம் கட்டாயமாகும்*
*எலக்ட்ரானிக் அடிப்படையான பாடப் பிரிவுகளில் சேர இயற்பியல், கணக்குப் பாடம் அவசியம்*
*தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் பெறப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment