Title of the document

மே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

*பத்தாம் வகுப்பு தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்*

*மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வியாழக்கிழமை ( மே 2) முதல் சனிக்கிழமை (மே 4) மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்*

*🔵🔵கட்டணம் எவ்வளவு?*

*மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்*

*இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும்*

*அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post