Title of the document


TNPSC Group 4: 2018 பிப்ரவரி 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது. பின்னர் சென்றாண்டு ஜூலையில் அதற்கான முடிவுகளும் வெளியாகின. தற்போது இது குறித்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 அதோடு, இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களின் பெயர்கள், டி.என்.பி.எஸ்.சி தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் இடம் பெற்றிருக்கும் நபர்கள் தங்களது ஆவணங்களுடன், சென்னையில் உள்ள தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தை நேரில் அணுகும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in தளத்தை அணுகவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post