Title of the document

சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019
தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 08.03.2019, மதியம் 03.30 மணி
தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2019

தேர்வுக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.700
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.1200

எஸ்.சி / எஸ்.டி / PwBD -க்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.350
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.600

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இ-சல்லான் பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.


தேர்வு நடைபெறும் விதம்:

தாள் -1க்கான தேர்வு (1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு ) காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், தாள்-2க்கான (6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு) மதியம் 02.00 மணி - மாலை 04.30 மணி வரையும் நடத்தப்படும்.

கல்வித்தகுதி:

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர்ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்த தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.

இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.

பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர், சிடெட் -இன் www.ctet.nic.in - என்ற இணையதளத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, (https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=147&iii=Y) - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post