Title of the document

போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆசிரியர்களுக்கு மாற்றாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு கூறியதால் ஆயிரக்காணோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனாலும் தற்காலிக ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையின்றி தாங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு வேலை தருவதாக கூறி ஏமாற்றுவது அரசுக்கு அழகல்ல என்று தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post