Title of the document


ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர் சங்கத்தின் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம், திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எம். அதியமான்முத்து தலைமை வகித்தார்.


இக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீதத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்க வேண்டும். உயர்கல்வி பயின்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post