Title of the document
உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு உள்ள சிக்கல்களை தவிர்க்க மேல்நிலைக்கல்வியில் பாடங்களின் பெயர்களை மாற்றி சான்றிதழ் வழங்க தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதைய மேல்நிலைக்கல்வியில் பாடப்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டன. அந்த பாடங்களின் பெயர்களிலேயே தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல் ஏற்படுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. உதாரணத்துக்கு வணிக கணிதம் பிரிவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், புள்ளியியல் பாடம் படித்திருந்தாலும், அதுசார்ந்த உயர்கல்வியில் சேர முடிவதில்லை. அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இதுபோன்ற சிக்கல்களைத்தான் மேல்நிலைக்கல்வியில் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களும் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்போது சந்திக்கின்றனர். இதற்கான தீர்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அதற்கான தீர்வை மேற்கொள்வதில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது மேல்நிலைக்கல்வியில் உயர்கல்வியில் சேரும் வகையில் பாடங்களுக்கான தேர்வில் மதிப்பெண் சான்றிதழ்களை புதிய பெயரிலேயே வழங்க அரசு தேர்வுகள் துறைக்கு பள்ளிக்கல்வித்துறை பாடங்களுக்கான புதிய பெயர் பட்டியல்களை இணைத்து பரிந்துரை செய்துள்ளது.முதல்கட்டமாக பிளஸ்1 வகுப்பில் 9 பாடங்களுக்கு இந்த ஆண்டும், பிளஸ்2 வகுப்புக்கு அடுத்த ஆண்டும் சான்றிதழ்களில் மாற்றம் செய்து வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post