புதுச்சேரி: ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, பாரதிதாசன் கல்லுாரியில், குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மனையியல் துறையின் சுகாதார கிளப் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மனையியல் துறையின் கீழ் இயங்கி வரும் மழலையர் பள்ளியின்
குழந்தைகளுக்கு, சத்தான சிற்றுண்டி செய்தல், காய்கறி மற்றும் பழங்களின் பெயர்களை கண்டுபிடித்தல் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், மழலையர் பிரிவில் படிக்கும் குழந்தகைள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மனையியல் துறையின் சுகாதார கிளப் ஒருங்கிணைப்பாளர் சோபனா, பேராசிரியர் ஆஷா மற்றும் மனையியல் பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவியர் செய்திருந்தனர்.
Post a Comment