இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக
உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கடந்த ஜூலை
மாதம் 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எஸ்சி,
எஸ்சிஏ, எஸ்டி, பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, பிசி, பிசிஎம்
பிரிவினர் 32 வயதிற்குள்ளும், ஓசி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க
வேண்டும்.
நிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம்.
நிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம்.
Post a Comment