Title of the document


நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் நிரந்தர பணியிடம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு முதுநிலைப்படி நிரப்பப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அடைந்த, 32 வயதுக்கு மிகாமல் உள்ள, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உறுதிசெய்து கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post