Title of the document

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பொது மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வருகிற திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தியை யட்டி வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று மாலை ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தாராளமாக பணத்தை மாற்றிக் கொள்ள வங்கிகள் இரவு 8 மணி வரை செயல் பட வேண்டும். எனவே அனைத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இரவு 8 மணி வரை பொது மக்களிடம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு பணம் வழங்க வேண்டும். டெபாசிட்டுகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் நேற்று இரவு 8 மணி வரை செயல்பட்டன. இன்றும் இரவு 8 மணிவரை செயல்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து புரசை வாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை துணை பொது மேலாளர் பாலராஜ் கூறிய தாவது:-
சாப்ட்வேர் தொழில் நுட்பம் காரணமாக ஏ.டி.எம்.கள் தாமதமாக செயல்படத் தொடங்கின. இதனால் எங்கள் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவு வந்திருந்தார்கள். அவர்கள் எவ்வித சிரம மும் இன்றி பணம் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 2700 வாடிக்கையாளர்களை கையாண்டுள்ளோம். இரவு 8 மணி வரை வங்கி செயல்பட்டது. ரூ.ஒன்றரை கோடி பணம் வினியோகம் செய்யப் பட்டது. தொடர்ந்து இன்றும் இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post