ஈரோடு,
சூரியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் காதுகேளாதோருக்கான அரசு பள்ளியில் இரவு காவலர், துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு நவ.10-ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் காலியாக உள்ளது. காலமுறை ஊதியத்தில் நிரப்பப்படும் இந்த பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1.9.16 அன்று 18 வயதிற்கு குறையாமலும், 32 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள் தங்களது வயது சான்று, சாதி சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நவ.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளித் தலைமை ஆசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.