Title of the document

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியாகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நவ., 3, காலை, 10:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post