சென்னை: காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் சமர்பிப்பதற்கான கால அவகாசம்
நவம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.@sutitle@நேரடி மானியத்
திட்டம்@@sutitle@@வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு காஸ் சிலிண்டருக்கு
மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. முன்னர், இந்த மானியம் காஸ்
ஏஜென்சிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. அதன்பின்னர், காஸ்
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கும் திட்டம்
அமல்படுத்தப்பட்டது.@sutitle@ஆதார் கட்டாயம்@@sutitle@@இந்த மானியம் பெற
வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்பிக்க
வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண் சமர்பித்தவர்களுக்கு மட்டுமே காஸ்
மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.@sutitle@நவம்பர் 30
வரை நீட்டிப்பு@@sutitle@@முன்னதாக, ஆதார் எண் சமர்பிக்க செப்டம்பர் 30
வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள்
நீட்டித்து நவம்பர் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.
Post a Comment