Title of the document


சேப்பாக்கம்: சேப்பாக்கம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., பைனலில் அபினவ் முகுந்த் விளாச, துாத்துக்குடி அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், கோப்பை வென்று அசத்தியது. தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடரின் பைனல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் துாத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற துாத்துக்குடி அணி, 'பேட்டிங்' தேர்வு செய்தது. அபினவ் அசத்தல்: துாத்துக்குடி அணிக்கு துவக்கமே அபாரமாக அமைந்தது. கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த் இணைந்து எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். அஷ்வத் வீசிய 4வது ஓவரில் அபினவ் முகுந்த் நான்கு பவுண்டரி விளாசினார். தன் பங்கிற்கு சாய் கிஷோர் பந்தை கவுசிக் காந்தி பவுண்டரி விரட்டினார். இருவரும் அரை சதம் கடந்தனர். கவுசிக் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் (55) அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். முடிவில், துாத்துக்குடி அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. அபினவ் (82), ஆனந்த் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கணேச மூர்த்தி 'ஹாட்ரிக்': கடின இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி, கணேச மூர்த்தி 'சுழலில்' ஆட்டம் கண்டது.

இவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் தலைவன் சற்குணம் டக்-அவுட்டானார். பின், கோபிநாத், சதீஷ், சசிதேவ் இவரிடமே ரன் எதுவும் எடுக்காமல் சிக்கினர். இதன் மூலம், கணேச மூர்த்தி 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார். யோ மகேஷ் (11), சுபாஷ் (8) நிலைக்கவில்லை.

சரவணன் (30) ஆறுதல் தந்தார். மற்றவர்களும் ஏமாற்ற, சேப்பாக்கம் அணி 18.5 ஓவரில் 93 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இதன் மூலம், இத்தொடரின் முதல் 'சீசனில்' துாத்துக்குடி அணி கோப்பை கைப்பற்றியது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post