புதுடில்லி: 'பிபா' உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 148வது இடத்துக்கு முன்னேறியது.
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, 'பிபா' வெளியிட்டது. இதில் இந்திய அணி 152வது இடத்தில் இருந்து 148வது இடத்துக்கு முன்னேறியது. இதற்கு, சமீபத்தில் மும்பையில் நடந்த புயர்டோ ரியோ அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் வெற்றி பெற்றது காரணம்.
இதன்மூலம் இந்திய அணி, 17 மாதங்களுக்குப் பின், மீண்டும் 'டாப்-150' வரிசையில் இடம் பிடித்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் 147வது இடம் பிடித்தது.
கடந்த ஜூலை மாதம் வெளியான தரவரிசையில் 152வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் 152வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 26வது இடத்தில் உள்ளது.
'நம்பர்-1' இடத்தில் அர்ஜென்டினா அணி நீடிக்கிறது. இதனை தொடர்ந்து, முறையே பெல்ஜியம், ஜெர்மனி, கொலம்பியா, பிரேசில் அணிகள் உள்ளன.
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, 'பிபா' வெளியிட்டது. இதில் இந்திய அணி 152வது இடத்தில் இருந்து 148வது இடத்துக்கு முன்னேறியது. இதற்கு, சமீபத்தில் மும்பையில் நடந்த புயர்டோ ரியோ அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் வெற்றி பெற்றது காரணம்.
இதன்மூலம் இந்திய அணி, 17 மாதங்களுக்குப் பின், மீண்டும் 'டாப்-150' வரிசையில் இடம் பிடித்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் 147வது இடம் பிடித்தது.
கடந்த ஜூலை மாதம் வெளியான தரவரிசையில் 152வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் 152வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 26வது இடத்தில் உள்ளது.
'நம்பர்-1' இடத்தில் அர்ஜென்டினா அணி நீடிக்கிறது. இதனை தொடர்ந்து, முறையே பெல்ஜியம், ஜெர்மனி, கொலம்பியா, பிரேசில் அணிகள் உள்ளன.