Title of the document

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் செய்யப்படும் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

திருச்சி, ஜூன் 5:

திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடி மதிப்பில் புதிய அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியார்.

அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று சில பகுதிகளில் மறுதோன்றல் காணப்படுகிறது. இதற்கான தீவிரம் குறைவாகவே இருப்பதாகவும், எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.”

அமைச்சர் மேலும், பள்ளிகளில் சுகாதார நடைமுறைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன என்றும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post