ஜூன் 9 - தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வருகிற ஜூன் 9ஆம் தேதி மிக விமரிசையாக வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், ஜூன் 9ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
விழாவிற்கான ஏற்பாடுகள் கீழ்வருமாறு:
வசந்தத் திருவிழா :
ஜூன் 1 முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.
வைகாசி விசாகம் :
பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்வாகும்.
அன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்:
* அதிகாலை 1:00 மணி – கோயில் நடை திறப்பு
* 1:30 மணி – விஸ்வரூப தரிசனம்
* 2:00 மணி – உதயமார்த்தாண்ட அபிஷேகம்
* காலை 9:00 மணி – உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை
* தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வருகை
* மாலை நேரத்தில் – சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை
* மேலும், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம்
* பின்னர், மகாதீபாராதனை நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த விசேஷ நாளையொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற மாவட்ட நிர்வாகம் அழைப்புத் தெரிவித்துள்ளது.
Post a Comment