தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது?
முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் , அதில் 1 முதல் 5 - ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 21 - ந் தேதியுடனும் , 6 முதல் 9 - ம் வகுப்புகளுக்கு அடுத்தமாதம் 24 - ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெறுகிறது . அதன் பிறகு , கோடை விடுமுறை எப்போது விடப்படும் ? என்பது குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடவில்லை . அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது , அதுதொடர்பான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என சொல்லிவிட்டனர் . பெரும்பாலும் தேர்வு முடிந்த மறுநாளில் இருந்தே மாணவ - மாணவிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிடும் என்றே சொல்லப்படுகிறது..
- தமிழ்நாட்டில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.22-ம் தேதியில் இருந்தும்,
- 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க வாய்ப்பு உள்ளது.
Post a Comment