ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!
தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாண வர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென என்டிஏ அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர் வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. விருப் பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலை தளம் வழியாக மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத் தங்கள் செய்ய மார்ச் 18, 19-ம் தேதிகளில் அவகாசம் வழங் கப்படும். என்சிஇடி நுழைவுத் தேர்வானது தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது.
கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெறலாம்.
Post a Comment