Title of the document
போராட்டத்திற்கு முன்பே - தலைப்புச் செய்தியாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..!

 

 


 



*போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பாகவே தமிழகத்தில் நேற்று 25.09.2023 முக்கிய ஊடகங்களில் செய்திகளில் முதன்மைச் செய்தியாகிய இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு" "சம ஊதிய" வேண்டிய போராட்ட செய்தி ஒளிபரப்பப்பட்டது.*

*இன்றைக்கு அனைத்து 26.09.2023  பத்திரிகை செய்திகளில் முதன்மை செய்தியாகவும்,முதல் பக்கத்திலும் வந்துள்ளது.*

*ஒட்டுமொத்த அனைத்து ஊடக பத்திரிகைகளும் முழு கவனத்தையும் நம் மீது திருப்பி உள்ளன, களம் சரியாக சென்று கொண்டிருக்கிறது...*

*கொள்கையில் உறுதியாய் கொண்ட பாதையில் நேர்மையாய் எடுத்த பணியில் சிறப்பாய் பணிபுரியும், எம் வீர மிகு இடைநிலை ஆசிரியர்களே களம் காண்போம் 14 ஆண்டுகால கண்ணீர் துடைப்போம்...*

*உலகிற்கு அகிம்சை வழியில் போராட கற்றுக் கொடுத்த தேசத்தந்தை காந்தியடிகளின் வழியில் நிரம்பட்டும், டி.பி.ஐ வளாகம் அதிரட்டும் 108 வாகனம்...!*

*அசையட்டும் அரசு... அடிக்கட்டும் அரசாணையை...!!*

*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... இச்சகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை... அச்சம் என்பது இல்லையே...!!!*

_தகவல் பகிர்வு_
*ஜே.ராபர்ட்*
*SSTA-மாநில தலைமை*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post