Title of the document

2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு 

நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் பதிவிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post