பொங்கலோ பொங்கல் கவிதை - கவிஞர் ந.டில்லிபாபு
போகியென்ற பெற்றோர்க்கு பிள்ளையென தான் பிறக்கயோகியரும் மானிடரும் ஒன்றாகத் தான்புகழஆகிய காரணத்தால் அயலாரும் தான்மகிழதேசியமாய் தெள்ளுதமிழ் தேனூறும் தீஞ்சுவையாய்வாழுகின்றாய் ! வளர்கின்றாய் ! வளர்தமிழைப் பேசுகின்றாய் !ஆளுகின்றாய் ! இன்றளவும் சூளுரைதான் ஏற்கின்றாய் !மங்குமொழி தமிழமுதை தங்குமின்ப மாக்கியேபொங்கலென பேரெடுத்த பெரும்பொங்கல் வாழியவே !இயற்கை வழிபாடே எங்கள் வழிபாடு !என்றநிலை எங்கள் கலை கடவுள் இல்லை இல்லையே !பொங்கலது பொங்கும்போது பேதமங்கு இல்லையே !திங்களொடு கதிரவனும் எங்களது எல்லையே !
இந்த செய்தியையும் படிங்க :- Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images, kolangal in Tamil
கவிஞர் ந.டில்லிபாபு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி ,
ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்
அலைபேசி : 9498020899 .
Post a Comment