Title of the document

பொங்கலோ பொங்கல் கவிதை - கவிஞர் ந.டில்லிபாபு


போகியென்ற பெற்றோர்க்கு பிள்ளையென தான் பிறக்க 
யோகியரும் மானிடரும் ஒன்றாகத் தான்புகழ 
ஆகிய காரணத்தால் அயலாரும் தான்மகிழ
 தேசியமாய் தெள்ளுதமிழ் தேனூறும் தீஞ்சுவையாய் 
வாழுகின்றாய் ! வளர்கின்றாய் ! வளர்தமிழைப் பேசுகின்றாய் ! 
ஆளுகின்றாய் ! இன்றளவும் சூளுரைதான் ஏற்கின்றாய் !
 மங்குமொழி தமிழமுதை தங்குமின்ப மாக்கியே 
பொங்கலென பேரெடுத்த பெரும்பொங்கல் வாழியவே ! 
இயற்கை வழிபாடே எங்கள் வழிபாடு ! 
என்றநிலை எங்கள் கலை கடவுள் இல்லை இல்லையே ! 
பொங்கலது பொங்கும்போது பேதமங்கு இல்லையே ! 
திங்களொடு கதிரவனும் எங்களது எல்லையே !

 
இந்த செய்தியையும் படிங்க :-  Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images, kolangal in Tamil

கவிஞர் ந.டில்லிபாபு
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி ,
 ஈரோடு மாவட்டம்
 சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் 
அலைபேசி : 9498020899 .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post