Title of the document

 பள்ளிகள் திறப்பு - மாணவ மாணவிகள் உற்சாகம் ! 

மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி : "பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது"

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். கொரோனா பரவல் குறைய தொடங்கி இருப்பதை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு சென்றனர்.

இதுநாள் வரையில் ஆன்லைன் வகுப்புகளால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மாணவர்களும், மாணவிகளும் கொரோனா பயமின்றி மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு சென்றனர். மீண்டும் பள்ளிக்கு சென்றது பற்றி கருத்து தெரிவித்த மாணவ-மாணவிகள் இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு வந்திருப்பது சிறகடித்து பறப்பது போல் உள்ளது என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post