
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க கால அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு :
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை யுஜிசி கடந்த ஏப்ரல் 29 - இல் வெளியிட்டது . அதன்படி எம்ஃபில் , பி.எச்டி . மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பிக்க டிச .31 - ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் தொற்றுப் பரவலால் பல் கலைக்கழகங்கள் பல மாதங்களாக மூடப் பட்டிருந்தன. நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவியது. தற்போதைய சூழல் கருதி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற் கான கால அவகாசம் மேலும் 6 மாதகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே , எம்ஃபில் , பி.எச்டி . மாணவர் கள் ஜூன் 30 - ஆம் தேதி வரை தங்கள் ஆய் வறிக்கையை சமர்ப்பித்துக்கொள்ளலாம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment