Title of the document
JACTTO GEO Strike - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை - அமைச்சர் தகவல்

JACTTO GEO Strike

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் அரசு பள்ளி மாணவர் களுக்கு இலவச மிதிவண் டிகளை அமைச்சர் செங் கோட்டையன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது ; இன்று தேசிய விவசா யிகள் தினம் . 75 சதவீதம் விவசாயிகள் உள்ள மாநி லம் தமிழகம். தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் செய்துவருகிறார் . நாராயணசாமி நாயுடு பெயரால் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை திரும்ப பெற அரசு ஆலோசனை செய்து வருகிறது. நீட் தேர்வு , ஐ.ஐ.டி ,, ஜே இஇ படிப்பிற்கு பயிற்சி பெற பதிவு செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் ஜனவரி மாதம் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post