Title of the document

பள்ளி கல்வி துறையில் 130 பேருக்கு பதவி உயர்வு !





பள்ளி கல்வித் துறையில், 130 பணியாளர்களுக்கு, உதவியாளராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


இந்தாண்டு மார்ச், 15 நிலவரப்படி, உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகியோரில், 130 பேருக்கு, உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.இதற்கான பட்டியலில் உள்ள, 150 பேரை, இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, முன்னுரிமை அடிப்படையில், கவுன்சிலிங் வழியே பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post