பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அரசாணை.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
நமது சகஆசிரியர்களுக்கு தெரிவிப்பது, நாம் பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ 8 கி.மீ க்கு அப்பால் வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது. நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால், தற்சமயம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அரசாணையை மேலே பகிரப்பட்டுள்ளது. பதிய தவற விட்டவர்கள், அடுத்த குறை தீர் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
Post a Comment