Title of the document

 கல்லூரிகள் திறப்பு வழிமுறை பல்கலை மானியக் குழு வெளியிட்டுள்ளது!

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 நாடு முழுதும், பல்கலை மற்றும் கல்லுாரிகளை திறப்பதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு வெளியிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ஊரடங்கு அமல் படுத்தப்பட்டபோது, பல்கலை, கல்லுாரிகள், மார்ச், 16 முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான, வழிகாட்டு நெறிமுறைகளை, யு.ஜி.சி., நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பல்கலைகள்உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, அந்த நிறுவனங்களின் துணைவேந்தர்கள், தலைவர்களே முடிவு செய்யலாம்.மாநில பல்கலை, கல்லுாரிகளை திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் இவற்றை திறக்கலாம். 


நோய்க் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதியில்லை. அதேபோல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்நத மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் அனுமதியில்லை.இறுதியாண்டு மாணவர்கள், நேரடி பயிற்சி பெற, வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


UGC Issues Guidelines - Download here...


ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post