Title of the document

புயல் எச்சரிக்கை கூண்டுகள் எவ்வாறு உருவாக்கும் என தெரியுமா  ?


புயல் உருவாகும் போது அதன் தன்மையைப் பொறுத்து துறைமுகங்களில், 1ம் எண் முதல் 11ம் எண் வரை எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்றால் என்ன ? புயலின் தாக்கத்தைப் பொறுத்து, ஏற்றப்படும் கூண்டுகள் குறித்து பார்க்கலாம்


புயல் காலங்களில் மீனவர்களுக்கும் கடலில் பயணிக்கும் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. பகல் நேரங்களில் கருப்பு நிறத்துடன் மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும், இரவு நேரங்களில் விளக்குகள் மூலமும் எச்சரிக்கை விடப்படுகிறது


கடலில் புயல் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டால் 

  • ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகங்கள் பாதிக்காமல், பலமான திடீர் காற்று வீச வாய்ப்பு உள்ளதை உணர்த்தும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.


  • அதேபோல் புயல் உருவானது உறுதிபடுத்தப்பட்டால் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்


  • மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தால் திடீர் காற்றோடு, மழை பொழிய வாய்ப்பு உண்டு.


  • துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட்டால் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.


  • 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புயல் கரையைக் கடக்கும் திசையைக் குறிக்கும். இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்திற்கு இடதுபக்கத்தில் புயல் கரையைக் கடந்து செல்லும்


இதேபோல் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கலாம்


  • புயல் துறைமுகத்தை நேரடியாக தாக்கக் கூடும் என்றால் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அப்போது புயலினால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும்


  • புயலானது தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்தால் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடந்து செல்லக் கூடும்


  • ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றும் பட்சத்தில் அதி தீவிர புயலானது, துறைமுகத்தின் வலதுபக்கமாக

         கரையைக் கடந்து செல்லும்.


  • அதிதீவிர புயலானது துறைமுகத்தின் அருகிலேயே கரையைக் கடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.


  • வானிலை மிகவும் மோசமடைந்தால் உச்சபட்சமாக 11வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

வானிலை எச்சரிக்கை மையத்துடன் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை உருவாகலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post