Title of the document

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் -  பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா ? (tnvelaivaaippu.gov.in)

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது 

கல்வித் தகுதியை பதிவு செய்ய 

  1. ஆதார் அட்டை எண், 
  2. குடும்ப அட்டை எண், 
  3. செல்போன் எண், 
  4. மின்னஞ்சல் முகவரி 

ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும். www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post