Title of the document
NMMS : 2008 to 2016 வரை Offline-ல் விண்ணப்பித்து இதுவரை NMMSS உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ள வங்கிக் கணக்கு விவரம் 28.10.2020 - க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு  
 
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , 
 
பொருள் : 
பள்ளிக் கல்வி - மத்திய அரசின் உதவிதொகை வழங்கும் திட்டம் தேசிய வழி மற்றும் தகுதி கல்வி உதவித் தொகை ( National Means Cum - Marit - Scholarship Scheme ) 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் அல்லாமல் Offline- யில் விண்ணப்பித்து இதுவரை NMMSS உதவித்தொகை வழங்கப்படாமல் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களுடன் 28.10.2020 - க்குள் அனுப்பக் கோருதல் - சார்பு .இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
 
 பார்வை : 
1.இணைச் செயலாளர் அவர்களின்நேர்முக கடிதம் எண்.1-15 / 2017 - SS நாள் .07.09.2020 | 2.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 21.08.2020 மற்றும் 20.10.2020 தேதியிட்ட F.No.1-15 / 2017 - SS , மின்னஞ்சல் கடிதம் 3.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் .048951 , நாள் .22.09.2020 மற்றும் 24.09.2020 
 
பார்வை 3 ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி கடந்த 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய வழியில் ( National Scholarship Portal ) அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுரை NMMSS உதவித் தொகை பெறாமல் விடுபட்ட மாணவ / மாணவிகளின் சரியாக தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களுடன் 28.09.2020 - க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது . இத்திட்டத்தில் NMMSS உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான ஒரு சில மாணவ / மாணவிகளின் மத்திய அரசின் மற்ற உதவித்தொகைத் திட்டங்களில் எட்டாம் வகுப்பு வரை பயன்பெற்று அத்திட்டத்திலிருந்து விலகி ( Withdrawl செய்து ) ஒன்பதாம் வகுப்பு முதல் NMMSS உதவிதொகைக்கு Offline மூலமாக விண்ணப்பித்திருப்பர் . இவர்களில் விடுபட்டவர்களையும் இப்பட்டியலில் சேர்க்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது . ஆனால் இதுவரை 19 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து மட்டும் விவரங்கள் பெறப்பட்டுள்ளது . மீதமுள்ள 18 மாவட்டங்களிலிருந்து இந்நாள் வரை பெறப்படவில்லை . மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கடந்த 2009-2010 ( NMMSS தேர்வு ஆண்டு 2008 ) முதல் 2017-2018 ( NMMSS தேர்வு ஆண்டு 2016 ) வரை இணைய uplulo ( National Scholarship Portal ) அல்லாமல் Offline- யில் விண்ணப்பத்து இதுவரை NMMSS உதவித்தொகை பெறப்படாமல் விடுபட்ட மாணவ மாணவிகளின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களுடன் பூர்த்தி செய்து 28.10.2020 அன்று மாலை 5 மணிக்குள் jdnsed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கோட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 
 
பெறுநர் :

சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் 
1.அரியலூர் 
2. ஈரோடு 
3.கரூர் 
4.புதுக்கோட்டை 
5.கிருஷ்ணகிரி 
6.கன்னியாகுமரி 
7.சிவகங்கை 
8.தஞ்சாவூர் 
9.நீலகிரி 
10.தேனி 
11.திருவள்ளூர் 
12.திருவாரூர் 
13 திருவண்ணாமலை 
14.தென்காசி 
15.செங்கல்பட்டு 
16.திருப்பத்தூர் 
17.இராணிப்பேட்டை 
18. இராமநாதபுரம் 
  



ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..      

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post