இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத் தொகை - மாணவர்களின் எண்ணிக்கை அனுப்ப இயக்குநர் உத்தரவு ..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள்,
பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன்
அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கம் அளிக்கும் வகையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2011 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மேற்கண்ட திட்டத்தை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்களை இனவாரியாக ( சுயநிதி பாடப் பிரிவு நீங்கலாக ) இணைப்பில் கண்டுள்ள மூன்று படிவங்களில் பூர்த்தி செய்து ksec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2020 க்குள் அனுப்பிவிட்டு , முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DSE Director Proceedings - Download here
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment