நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் நவ.30ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 36,469 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியது.
Post a Comment