ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும். பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த
தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன்
இணைந்திருங்கள்..
Post a Comment