Title of the document
15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று ( 7.9.2020 ) தலைமைச் செயலகத்தில் , பள்ளிக்கல்வித் துறை சார்பில் , ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் , வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள் . மேலும் , 2020 - ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி இரா.சி. சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு . ஸ்ரீதிலீப் ஆகியோர் விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள் .

தமிழகத்தில் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post