Title of the document
பள்ளிக் கல்வி - பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் IFHRMS மூலம்  ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளிலும் IFHRMS மூலம் சம்பளம் மற்றும் இதர பட்டியல்கள் கருவூலத்திற்கு சமர்ப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மதுரை , திருநெல்வேலி , திருவாரூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜுன் 2020 மாத சம்பள பட்டியல் IFHRMS மூலம் கருவூலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது. பெரம்பலூர் , நாமக்கல் , தருமபுரி , திண்டுகல் , தூத்துகுடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் இப்பணியினை முடிக்க கருவூலகத்துறை திட்டமிடப்பட்டுள்ளது எனவே மேற்கண்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களின் விவரங்களை IFHRMS மென்பொருளில் பதிவு செய்து , ஜுலை 2020 மாத ஊதிய பட்டியலை IFHRMS மூலம் கருவூலகங்களுக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு சமர்ப்பித்தப்பிறகு அவ்விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இவற்றில் ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் சார்ந்த கருவூலகத்தினை தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து நிலுவை ஏதுமின்றி சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களின் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ( DDO ) உரிய பணியினை முடிக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post