Title of the document
பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது - மாணவர்களின் நலன் கருதி இரத்து செய்து - 2020-2021 - ம் கல்வியாண்டியிலிருந்து 4 பாடத்தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது .


 பள்ளிக் கல்வித் ( அதே துறை அரசாணை ( நிலை ) எண் .57 நாள் : 06.07.2020 திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி வருடம் , ஆனி -22 படிக்கப்பட்டவை : 1 அரசானை ( நிலை ) எண் .166 , பள்ளிக்கல்வி ( அதே ) துறை , நாள் 18.09.2019 , 2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண் .023432 / W4 / S1 / 2020 நாள் 29.06.2020 , 


நடைமுறையிலுள்ள 4 க 2 . ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் , மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் , வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , 


முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி , மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 - ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது



 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் , மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்கள் ஆகியோர் , பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்து , 


மேற்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து , 2020-2021 - ம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் , புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை இரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் . 3. மேற்காணும் சூழ்நிலையில் , பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று ,


 மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் வேலைவாய்ப்புகள் கருங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி , மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை இரத்து செய்தும் , 2020-2021 - ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு ஆணையிடுகிறது .

 ( ஆளுநரின் ஆணைப்படி )

 தீரஜ் குமார் அரசு முதன்மைச் செயலாளர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post