Title of the document
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் ( ஏஐசிடிஇ ) 62 - ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு , அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் ? என்பது குறித்த தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம் புதிய கல்வியாண்டு ஆகஸ்ட் 1 இல் தொடங்கி 2021 - ம் ஆண்டு ஜூலை 31 - ம் தேதி வரை பின்பற்றப்படும்.

இதுதவிர பொறியியல் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஆகஸ்ட் 30 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். மேலும் , 2 , 3 - ஆம் சுற்று கலந்தாய்வை செப்டம்பர் 15 - ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும். வரும் கல்வியாண்டில் 2 , 3 , 4 ஆம் ஆண்டு மாணவர்களுக் கான வகுப்புகளை ஆகஸ்ட் 16 ஆம்தேதி முதல் தொடங்க வேண்டும்.

தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15 - இல் தொடங்க வேண்டும். முதுநிலை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15 - ஆம் தேதி முதல் தொடங்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஆகஸ்ட் 10 - ஆம் தேதிக் குள் முடிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post