Title of the document
*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான / ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி / ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் / இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.*

*⚔️*
*🛡️ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.*

*⚔️*
*🛡️இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 21.07.2020 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத்தலைவர் மு.ராஜேந்திரன், அகில இந்தியச் செயலாளர் மு.P.ழு.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் ளு. சேது செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்தல் மற்றும் மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட்          ஆகியோர் மீது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡️கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 4 மாதகாலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 1½ கோடி மாணவர்களின் கல்வி நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி நோய்த்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்தவுடன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.*

*⚔️*
*🛡️மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பாக 05.08.2020 அன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 'கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்" நடத்திட முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡️மேலும் கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 % இட ஒதுக்கீட்டை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட வேண்டும் எனவும், தமிழகத்தில் தொலைக்காட்சி வழியே ஒளி பரப்பப்படும் 2 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை அனைத்துப் பகுதி மாணவர்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில் எளிதில் தெரியும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*⚔️*
*🛡️மேலும் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ந்து ஈடுபடுத்தும் போக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான,*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*

*_தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்,_*

*_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,_*

*_தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கம்,_*

*_தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்_*

*ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.*

*⚔️*
*🛡️இறுதியில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் நன்றி கூறினார்.*
                                    
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post