Title of the document

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - இயக்குநர் உத்தரவு.  

IMG-20200612-WA0006

கொரானா நோய் கிருமி பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் , பள்ளி மாணவர்களிடம் , 2019-2010ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம் மற்றும் 2021 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , ஒரு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்தப்படுத்துவதாக புகார் பெறப்பட்டுள்ளது.

அரசாணையினை மீறி கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தெரிவிக்கலாகிறது.

        - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post