Title of the document

பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! 

images%2528159%2529

பள்ளிக்‌ கல்வித்துறை பல்வேறு வழி காட்டுதல்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.அதன்படி, அனைத்து வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிக ளுக்கும்‌ வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள்‌ தேவையான எண்ணிக்கையில்‌ வழங்கப்படும்‌ பாடப்புத்த கங்களை அந்தந்த மாவட்‌ டக்கல்வி அலுவலக வினியோக மையங்களில்‌ பெற்று, அவற்றை மாவட்‌ டக்‌ கல்வி அலுவலர்கள்‌ வரும்‌ 22ம்‌ தேதிதொடங்கி வரும்‌ 30ம்‌ தேதிக்கு முன்‌ னர்‌ அந்தந்த பள்ளிகளில்‌ சம்பந்தப்பட்ட தலைமை யாசிரியரிடம்‌ ஓப்படைக்‌ கவேண்டும்‌.மாவட்டக்‌ கல்வி அலுவலர்களால்‌ ஏற்கனவே அமைக்கப்பட்‌டுள்ள வழித்தடங்களில்‌ எந்‌தெந்த தேதியில்‌ எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமை யாசிறியருக்கு தெரிவித்து தயார்‌ நிலையில்‌ இருக்‌கும்படி அறிவுரை வழங்க வேண்டும்‌.

மாவட்டக்‌ கல்வி அலுவலர்களால்‌ பள்ளியில்‌ வழங்கப்ப டும்‌ பாடப்புத்தகங்கள்‌ பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில்‌ பெறப்‌ பட்டுள்ளதா? என்பதை தலைமையாசிரியர்கள்‌ சரிபார்த்து கொள்ள வேண்‌டும்‌.குறைவாக இருந்தால்‌ அந்த தகவலை சம்பந்தப்‌ பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு தெரிவித்து பள்ளிதுவங்குவதற்கு முன்‌ னர்‌ அவற்றைப்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. இதற்கான போக்குவரத்து செலவினங்கள்‌ பள்‌ளிக்கல்வி இயக்குனரகம்‌ மூலம்‌ அனைத்து முதன்‌மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ விரைவில்‌ வழங்‌கப்படும்‌.

மேற்காணும்‌ பொருட்களை தனிநபர்‌ களை வைத்து வாகனத்தில்‌ ஏற்றுதல்‌ மற்றும்‌ இறக்கு தல்‌ பணியின்‌ போது சரியான எண்ணிக்கையில்‌ வினியோகம்‌ செய்வதை கண்காணிக்க முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌, மாவட்டக்‌ கல்வி அலுவல கத்தில்‌, பள்ளிகளில்‌ பணி புரியும்‌ அலுவலக பணி யாளர்களை ஓவ்வொரு வாகனத்துடனும்‌ அனுப்பி வைக்க முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்‌டுக்‌ கொள்ளப்பட்டுள்ளனர்‌.மேற்படி பணிகளை மேற்கொள்ளும்‌ போது கொரோனா நோய்த்‌ தொற்று ஏற்படாதவாறு சமூக விலகலை கடை பிடித்து, அரசின்‌ விதி களை பின்பற்றுவதுடன்‌ பணியாளர்கள்‌ முகக்கவ சம்‌மற்றும்‌ கையுறைகள்‌ அணிந்து பணிபுரிவதை முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌.

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி பாடப்புத்‌ தகங்கள்‌, நோட்டுப்புத்த கங்கள்‌, விலையில்லா இதர பொருட்கள்‌ மாணவ, மாண விகளுக்கு வழங்‌கப்பட்டுவிட்டதை உறுதி - செய்து அதன்‌ விவரத்தை வரும்‌ ஜூலை 30ம்‌ தேதிக்‌ குள்‌ பள்ளிக்கல்வி இயக்‌குநருக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்‌டும்‌ என்று முதன்மை கல்வி அலுவலர்கள்‌ , மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, kalvi news in tamil, kalvi news in today, TN KALVINEWS, todays kalvinews, கல்வி நியூஸ், kalvi news, kalvi news in tamil, kalvi news in today, 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post