Title of the document
இந்திய - சீனா எல்லை பகுதியில் இருபுறமும் ராணுவ வீரர்கள் குவிப்பு: போர் முழும் அபாயம் !!

 இந்திய - சீனா எல்லை பகுதியில் இருபுறமும் ராணுவ குவிக்கப்பட்டு இருப்பதால் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். சீன ராணுவ வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் இந்திய ராணுவ வீரர்களை தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவ வீரர்ககளை தாக்குதல் நடத்தினார்கள்.


 இத்தாக்குதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3,488 கி.மீ நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது, இந்திய மற்றும் சீனப் படைகள் அங்கு முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. விமான தளங்கள் செயல்பாடுகளை தொடங்கி உள்ளன மற்றும் கடற்படை உத்தரவுக்காக தயார் நிலையில் உள்ளன. இராணுவ பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் கூறுகையில், எல்லையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டு வருகின்றனர். பலரும் அந்தந்தப் படைகளை பழிவாங்குமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி கூறுகையில், பழிவாங்கக் கேட்பவர்கள் அனைவரும் போர்க்குணமிக்கவர்கள், இரு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான ஒரு போர் ஏற்படுத்தக்கூடிய அழிவுகளை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாதவர்கள் என கூறினார். ஜூன் 15 அன்று இந்திய அல்லது சீன வீரர்கள் இராணுவ நெறிமுறைக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால் அருகிலுள்ள ரோந்துப் புள்ளி 15 மற்றும் 17 இல் அதிக வன்முறையுடன் எல்லை முழுவதும்  ஒரு மிகப்பெரிய  போர் நிலை ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post