Title of the document

IMG_20200607_075858

18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +1 மற்றும் +2 தேர்வுகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மாணவர்களின் நலன் கருதி , பின்வருமாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. 18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +2 தேர்வினை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலும் , +1 Arrear தேர்வினை தாங்கள் பயிலும் பள்ளியிலும் எழுதுதல் வேண்டும் . சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் இது குறித்த தெளிவான அறிவுரைகளை வழங்குவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post