இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு நிலவி வருவதால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐடி மற்றும் ஐடி சேவைக்கான துறைகள் மட்டும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் அதற்கு பெரும்பாலான பாதிப்புகள் இல்லை.
உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனம் தற்போது இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் என அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக சேவை அதிகாரிகளாக வேலைக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணி நியமனம் தற்காலிகமாக காண்ட்ராக்ட் படி இருக்கும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு மொழி தகுதி மற்றும் பிளஸ் டூ படித்து இருந்தாலே போதும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
ஹைதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், இந்தூர், போபால் மற்றும் லக்னோ நகரங்களில் புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமேசான் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் வேலைகளைச் சேர்க்கும் என்று கூறியது, இந்திய சந்தையில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தாலும்.
இந்த வேலைகள் - நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்பட்டவை - தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, உள்ளடக்க உருவாக்கம், சில்லறை விற்பனை, தளவாடங்கள் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் முழுவதும் இருக்கும், மேலும் அமேசானின் முதலீடுகள் இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 700,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment