Title of the document

 ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு - பத்திரிகை செய்தி!



நாடுமுழுவதும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குப் பிறகு பள்ளி , கல்லூரிகள் திறக்கப் பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16 - ந் தேதி முதல் பள்ளி , கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட் டுள்ளது. பல்வேறு கட்ட ஊரடங்கு நடவடிக்கைக ளுக்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் , பள்ளி , கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

இதனிடையே , கொரோனாபாதிப்பு மண்ட லங்களை கருத்தில் கொண்டு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்ப டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி , பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள பள்ளிக் கல்லூ ரிகளை திறப்பது என்றும் சமூக பரவலை கடைபிடித்து , ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது என்று கூறப்பட்டது. எனினும் அத்தகைய முடிவுகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.


 rcTQJoXKOm3I3-GB1E4E0XVwXQw6FUBoWVUNT90-5U8gjrHNbvyXysI0AbD1NvdT-BzvPJ5JN7aVSSBol247gMSFQb_rAspxnZxexYoTNDpw62jH9BVin-syeWXgyVTnAcXrwvpJoTtHC4Vacvt8-cIcsatFAlF5%253Ds0-d


இதையடுத்து அண்மையில் செய்தியாளர் களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் கூறுகையில் , ஆகஸ்டு 15 - ந் தேதிக்கு பிறகு பள்ளி கள் தொடங்கப்படும் . அப்போதைய சூழலை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும். பல்கலைக்கழகங்களும் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்படும். 10 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவர்களுக் கான தேர்வு முடிவுகளும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குள் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகள் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்வு முடிவுகள் அனைத்தும் ஒன்றாக வெளியிடப்படும். நீட் தேர்வு ஜூலை 26 - ம் தேதியும் , ஜே.இ.இ. தேர்வு ஜூலை 18 முதல் 23 - ம் தேதி வரை நடத்தப்ப டும்.

இவ்வாறு கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post