Title of the document
12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் நேற்றுவரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டு 44 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post